தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அ இ அதிமுக வேட்பாளர் டாக்டர்.ஜெ.ஜெயவர்தன் 16/4/2019 காலை விருகம்பாக்கம் தொகுதி, ராணி அண்ணா நகர், 131வது வட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அவர் வாக்கு சேகரித்து சென்ற குடியிருப்பு பகுதிகள் எல்லாம் ஏராளமான பொதுமக்கள் அவருக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர் அவருடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி எம்.எல்.ஏ, பகுதி செயலாளர் மலைராஜன்,மற்றும் காமராஜ், வட்ட செயலாளர் டி.கோவிந்தன்,எஸ்.பி. பழனி கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க மாவட்ட செயலாளர் லோகநாதன், தே.மு.தி.க.,ஜே, தினகரன், பா.ஜ.க. டால்பின் ஸ்ரீதர், த.மா.கா. சத்தியநாராயணா, புதிய நீதி கட்சி எஸ்.என்.ரமேஷ், புரட்சி பாரதம் ராஜி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்