மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கருணாநிதி சமாதியில் அஞ்சலி.!!

சென்னை

நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற இடைதேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலைஞர் அண்ணா சமாதியில் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்காக உழைப்பாளர் சிலையில் இருந்து சமாதி வரை ஊர்வலமாக நடந்து சென்றனர்..

இந்த ஊர்வலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், சேகர்பாபு, டி.ஆர்.பாலு மற்றும் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்..

அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாரகள் அதனை தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் . அதனைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் தென்சென்னை மத்திய சென்னை வடசென்னை திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *