டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு கோரிக்கை மனுவை அளித்தார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சருக்கு இன்று காலை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு
பின்னர் பிரதமர் நரேந்திர மோடி இல்லத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு மோடியை சந்தித்து சிறிது நேரம் பேசினார். அப்பொழுது தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கான கோரிக்கை மனுவையும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் அளித்தார். பிரதமர் மக்களை வாங்கிப் படித்துவிட்டு கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்தார்