பா. சிதம்பரம் டெல்லியில் திடீர் செய்தியாளர் சந்திப்பு.!!
அவர் பேட்டியில் கூறியதாவது கடந்த 15 மாதத்திற்கு மேலாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் இருந்தேன்.
ஐ.என்.எஸ் மீடியா வழக்கைப் பொருத்தவரை நானோ என் குடும்பத்தினரோ குற்றவாளி அல்ல – ப.சிதம்பரம் பேட்டி.
சிபிஐ போட்ட எப்.ஐ.ஆரிலும் என் பெயர் இல்லை கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் இருந்தேன்.
நேற்றும் இன்றும் நீதிமன்றத்தை அணுகினோம்.
நான் எங்கும் தப்பி ஓடவில்லை. தொடர்ந்து எனது வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.
இந்த வழக்கு இன்றும் வரவில்லை. நாளையும் வராது. வெள்ளிக்கிழமை தான் வரும்.
நான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தலைவணங்குகிறேன்.
கடந்த 24 மணி நேரத்தில் எத்தனையோ குழப்பங்கள் நடந்துள்ளது என பேட்டியில் பா. சிதம்பரம் தெரிவித்தார்