சென்னையை அடுத்த மூவரசம் பேட்டை அரசு பள்ளியில் 25 வருடங்களுக்கு முன் படித்த மாணவ-மாணவிகள் மீண்டும் சந்தித்த நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சி.!!
சென்னையை அடுத்த மூவரசம் பேட்டை அரசு பள்ளியில் 25 வருடங்களுக்கு முன் படித்த மாணவ-மாணவிகள் மீண்டும் சந்தித்த நெஞ்சை நெகிழ வைக்கும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 25 வருடங்கள் முன்பு 1994-1995 வருடங்களில் இந்த அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் சந்தித்தனர். அப்பொழுது அவர்கள் படித்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை மிகுந்த சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டனர். பின்பு அனைவரும் ஒன்றுகூடி குழு படம் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியை அப்பகுதியில் உள்ள மக்கள் அதிசயத்துடன் கண்டுகளித்தனர்.