திமுக சென்னை மேற்கு மாவட்டம் திருவல்லிக்கேணி 119வது வட்டத்தில் திமுக சார்பில் மாமன்ற உறுப்பினராக போட்டியிட கமலா செழியன் விருப்ப மனு செய்தார்.!!
சென்னை மேற்கு மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி 119வது வட்டமாமன்ற உறுப்பினர் பொறுப்புக்கு இன்று மாவட்டச் செயலாளர் ஜெ அன்பழகனிடம் சென்னை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த நிர்வாகி கா.வே.செழியன் மனைவி வே.கமலா இன்று மனு தாக்கல் செய்தார். அவரிடம் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.நேர்காணல் நடத்தினார். இந்நிகழ்வில் திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் ஏ.ஆர். பி.எம்.காமராஜ், ஆர்.என்.துரை, கா.வே.மோகன், லைனர் கே.பிரபு உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.