தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திரைப்பட இயக்குனர் ஆதி ராஜன் எழுதிய ஒம் நமச்சிவாய என்ற சிறப்பு பாடல் தொகுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.!!

தமிழகம்

மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு ஆயிரத்து 10 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெருவுடையார் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திரைப்பட இயக்குனர் ஆதிராஜன் எழுதி தயாரித்த “ஓம் சிவாய நமசிவாய” என்ற சிறப்பு பாடலை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு.கே. பழனிச்சாமி அவர்கள் இன்று வெளியிட்டார். கல்வியியல் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் மாண்புமிகு பா.வளர்மதி அவர்கள் பெற்றுக்கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாநில இலக்கிய அணி இணைச் செயலாளர் டி. சிவராஜ், தென்சென்னை வடக்கு மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் கே.எஸ். மலர்மன்னன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஏ.பழனி இயக்குநர் ஆதிராஜன், இசையமைப்பாளர் பி.சி. சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *