சட்டம் ஒழுங்கைக் காப்பதில் பாஜக தோல்வி: கேஜ்ரிவால் காட்டம்

சென்னை

புதுடெல்லியில் சட்டம் ஒழுங்கைக் காப்பதில் பாஜக முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று தெரிவித்தார்.

ட்விட்டரில் கேஜ்ரிவால் பதிவு வருமாறு:

”புதுடெல்லியில் சட்டம் ஒழுங்கு இன்றைய தினம் மிக மோசமான நிலைக்கு வந்துள்ளது. பாஜக முற்றிலும் தோல்வியடைந்துள்ளது” என்று கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லியில் ஆம் ஆத்மி அரசு நிர்வாகம் செய்துவந்தாலும் போலீஸ் துறையைப் பொறுத்தவரை மத்திய அரசு தன்னிடமே வைத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரு தற்கொலை நிகழ்வுகளுக்குப் பிறகு அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேற்கு டெல்லி காவல்நிலையத்தில் ஒரு 17 வயது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இன்னொன்று, விமானப் பணிப்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படும் சம்பவம் நடந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *