112 எம்எல்ஏ.க்களை எதிர்த்து விவசாயிகள் ம.பி.யில் பிரச்சாரம்

சென்னை

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் விவசாய அமைப்பான ஆம் கிசான் யூனியன் தலைவர் கேதார் சிரோஹி கூறியதாவது:

”ம.பி. சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. கடந்த தேர்தலில் கிராமப்புற பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஆதரவில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பலர் சட்டப்பேரவையில் விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசவில்லை. அதுபோல, விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி பேசாத 112 எம்எல்ஏக்களை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களுக்கு எதிராக விவசாயிகள் பிரச்சாரம் செய்வார்கள். இந்த 112 எம்எல்ஏ.க்களின் 86 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 24 பேர் காங்கிரஸ் மற்றும் 2 பேர் சுயேச்சைகள் ஆவர்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *