ஆப்கனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 11 ராணுவ வீரர்கள் பலி

சென்னை

ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் ஆப்கன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் பலியாகினர்.  4 பேர் காயமடைந்தனர்.  வெள்ளிக்கிழமை இரவிலிருந்து இந்தத் தாக்குதல் நடந்து வருகிறது. ராணுவ வீர்ர்கள் நடத்திய பதில் தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 13 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனினும் இந்தத் தாக்குதலை தலிபான்கள் நடத்தி இருக்கலாம் என்று ஆப்கன் பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *