கொரோனோ ஊரடங்கு பாதிப்பு காரணமாக தமிழ்நாடு பத்திரிக்கை போட்டோகிராபர் சங்கம் சார்பாக குறைந்த ஊதியம் பெறும் பத்திரிக்கை போட்டோகிராபர்களுக்கு 3 கட்டமாக நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.!!

தமிழகம் தொழில்நுட்பம்

கொரோனோ ஊரடங்கு பாதிப்பு காரணமாக தமிழ்நாடு பத்திரிக்கை போட்டோகிராபர் சங்கம் சார்பாக குறைந்த ஊதியம் பெறும் பத்திரிக்கை போட்டோகிராபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.!!

சென்னை மே 20

கொரோனோ ஊரடங்கு பாதிப்பு காரணமாக தமிழ்நாடு பத்திரிக்கை போட்டோகிராபர் சங்கம் சார்பாக குறைந்த ஊதியம் பெறும் பத்திரிக்கை போட்டோகிராபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.இச்சங்கத்தின் சார்பில் முதல் கட்டமாக எழும்பூரில் உள்ள செஞ்சிலுவை சங்கம் மூலமாக 150 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 2ம் கட்டமாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெக்குமார் அவர்களின் ஏற்பாட்டில்சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஏராளமான பத்திரிகை போட்டோகிராபர்களுக்கு அரிசி உள்பட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன 3ம் கட்டமாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரா திருக்கோயில் மடத்தின் சார்பாக பிரபல ஜோதிடர் ஷெல்லி அவர்களின் ஏற்பாட்டில் குறைந்த ஊதியம் பெறும் ஏராளமான பத்திரிகை போட்டோகிராபர்களுக்கு வழங்கப்பட்டது.இந்த 3 கட்ட நலத்திட்ட உதவிகளையும் தமிழ்நாடு பத்திரிகை போட்டோகிராபர்கள் சங்க (TNPPA) நிர்வாகிகள் தலைவர் பி.ஏ.ராஜு,செயலாளர் சீனிவாசன்,துணை செயலாளர் ராஜேஷ், துணைத்தலைவர்கள் குமரேசன்,ஹரி.பொருளாளர் சிதம்பரம் ஆகியோரது சிறப்பான ஏற்பாட்டினால் பத்திரிக்கை போட்டோகிராபர் பெரும்பாலானவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *