தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்றுகோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு.!!!

சென்னை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (30.5.2021) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு,
சேலம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு வனத்துறை
அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், கண்காணிப்பு அலுவலர்கள் திரு.மு.அ.சித்திக், இ.ஆ.ப., திரு.சி.சமயமூர்த்தி. இ.ஆ.ப., திரு.இரா.செல்வராஜ். இ.ஆ.ப., கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி,
ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டகளின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் மருத்துவர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *