திருவள்ளூரில் 1,181 ஆக இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை 887 ஆகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,117 ஆக தினசரி பாதிப்பு 912 ஆகவும், தஞ்சையில் 995 ஆக இருந்த பாதிப்பு 786 ஆகவும் குறைந்து இருக்கிறது.
இதே போன்று மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தினசரி பாதிப்பு 1000-க்கும் குறைவாகவே உள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 24-ந்தேதியில் இருந்து தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை (ஜூன் 1-ந்தேதி) முதல் வருகிற 7-ந்தேதி வரையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
இந்த கால கட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்காது என்பதால் கொரோனாவின் தாக்கம் அடுத்த ஒரு வாரத்தில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அதே நேரத்தில் ஈரோட்டில் மட்டும் நோயின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கொரோனாவின் தாக்கம் பெருமளவு குறைந்து இருக்கும் நிலையில் ஈரோட்டில் மட்டும் பாதிப்பு குறையாமலேயே இருக்கிறது.
கடந்த 26-ந்தேதி அன்று அங்கு தினசரி 1,642 ஆக இருந்தது. அது நேற்று 1,784 ஆக உயர்ந்துஇருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவே அதிகபட்ச பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.