தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.!!!

தமிழகம்

கரோனா இரண்டாம் அலை காரணமாக மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 14ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில், பொதுமுடக்கம் நீட்டிப்பு, கூடுதல் தளர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *