டெல்லியில் சோனியா-ராகுல் காந்தியை சந்தித்தார் முதல்வர் முக ஸ்டாலின்.!!

சென்னை

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றபின் தனிவிமானத்தில் முதன்முதலாக டில்லி சென்றார். நேற்று  மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஸ்டாலின், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். பின்னர் செய்தியளார்களை சந்தித்தபோது, பிரதமருடனான சந்திப்பு மன நிறைவான சந்திப்பாக அமைந்துள்ளதாகவும் மேலும் தமிழகத்தின் வளர்ச்சி திட்டத்துக்கு உறுதுணையாக இருப்பேன் என பிரதமர் மோடி உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் காங்., எம்.பி., ராகுலை அவர்களது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா உடன் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *