தென்காசி மாவட்டம் மருதம்புத்தூர் ஊராட்சி செயலாளர் அருணா இல்ல திருமண விழா :- பூங்கோதை ஆலடி அருணா – சிவபத்மநாதன் ஆகியோர் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.!!

தமிழகம்

தென்காசி மாவட்டம் மருதம்புத்தூர் ஊராட்சி செயலாளர்
அருணா இல்ல திருமண விழா :-
பூங்கோதை ஆலடி அருணா – சிவபத்மநாதன் ஆகியோர் நேரில் வந்து
மணமக்களை வாழ்த்தினார்கள்

தென்காசி.ஆக.31-

மருதம்புத்தூர் ஊராட்சி செயலாளர் அருணாச்சலம் இல்ல திருமண விழாவில், திமுக மருத்துவ அணி மாநில தலைவர் பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரின் நல்லாசியுடன்,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் ஊராட்சி செயலாளரும்,
தொழிலதிபருமான அருணாச்சலம் – முத்துலெட்சுமி தம்பதியரின் மகள் அ.மீனாட்சிக்கும், மு.மருது திருமணம் மருதம்புத்தூர் மீனாட்சி திடலில் கடந்த
26-ம் தேதியன்று சிறப்பாக நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில், திமுக மாநில மருத்துவ அணி தலைவர் டாக்டர்.பூங்கோதை ஆலடி அருணா,
தென்காசி மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், முக்கூடல் பேரூர் செயலாளர் ஆர்.லட்சுமணன், ஒன்றிய செயலாளர் வி.ஏ.மாரிவண்ணமுத்து, ஆலங்குளம் ஒன்றிய செயலாளர்கள் மு.செல்லத்துரை, எம்.பி.எம்.அன்பழகன், கீழப்பாவூர் செயலாளர் சிவன் பாண்டியன்,
தெற்கு மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் ஆலடி எழில் வாணண்,
ஆர்.பாலா, ஆனைக்குட்டி பாண்டியன், பாப்புலர் செல்லத்துரை, ராமநாதன், மாரியப்பன், கதிர்வேல், சங்கரலிங்கம், செல்வி
சங்குகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர்
எம்‌.மீனாட்சி சுப்பிரமணியன், எம்.கார்த்திகா ஜோதி,அ.மணிகண்டன்,
எம்.முத்துக்குமார்,எம்‌.கீர்த்தனா,
கலைஞர் அறக்கட்டளை நிர்வாகிகள், டிராகன் நண்பர்கள்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *