தமிழகத்திற்கு .03 லட்சம் கோவேக்சின்கள் வரவுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.!!!

தமிழகத்திற்கு அடுத்த இரண்டு நாள்களில் 1.03 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் வரவுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாளில் தமிழகத்திற்கு 1,03,370 கரோனா தடுப்பூசிகள் வரவுள்ளதாக தெரிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் பல தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த நாளை 63,370 கோவேக்சின் தடுப்பூசிகள் வரவுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த நாளை 40,000 கோவேக்சின் தடுப்பூசிகள் […]

Continue Reading

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.!!!

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும்,  பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில்,  மு.தீனபந்து இ.ஆ.ப, (ஓய்வு), டி.ஆர்.பி. இராஜா, மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர், மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Continue Reading

மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை(ஜூன் 9) பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது.!!!

மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை(ஜூன் 9) பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. நாட்டில் கரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் சூழலில் நாளை காலை 11 மணிக்கு காணொலி மூலம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி அறிவித்த மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி, தீபாவளி வரை இலவச உணவு தானியங்கள் உள்ளிட்டவை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.

Continue Reading

புதுவை மாநிலத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் செவ்வாய் காலை 9 மணி முதல் அமலுக்கு வந்ததால், அனைத்துவித கடைகளும், மதுக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.!!!!

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மே 10ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இதன்படி, வழக்கம் போல் காலை 5 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இயங்கிய காய்கறி, மளிகை, பால், மருந்துப் பொருட்கள் அடங்கிய அத்தியவசிய கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் மாலை 5 மணி வரை இயங்குவதற்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளன. பிற அனைத்து வித கடைகளும் காலை 9 மணி முதல் […]

Continue Reading

கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை வராது .இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.!!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி உரை இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது கொரோனா தொற்றால் இந்தியா சந்தித்து வரும் சவால்கள், மருத்துவ கட்டமைப்பு, தடுப்பூசி போன்றவற்றை பற்றி குறிப்பிட்டார். அப்போது பிரதான் மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் மூலம் ஏழை மக்கள் 80 கோடி பேருக்கு இலவச ரேசன் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

Continue Reading

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களைமாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.!!!

தமிழகத்தில் படிப்படியாக கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானோர் குணமடைந்து வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 97 ஆயிரத்து 299 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று 19,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 56 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினசரி ஆயிரத்திற்கு மேல் குறைந்து கொண்டு […]

Continue Reading

தமிழகத்தில் மின் தேவைகள் குறைந்ததற்கு காரணம்.!!!

தமிழகத்தில் பொதுமுடக்கம், பரவலாக மழை உள்ளிட்ட காரணங்களால் மின்தேவை குறைந்துள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவது, பொதுமுடக்கத்தால் பல்வேறு அலுவலகங்கள் இயங்காதது உள்ளிட்ட காரணங்களால் மின்தேவை குறைந்துள்ளது. இதன்படி, மின்தேவையின் அளவு 3,094 மெகாவாட் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சராசரி மின்தேவை சுமாா் 12 ஆயிரம் மெகாவாட்டை ஒட்டி உள்ளது. அதே நேரம், பொதுமுடக்கத்தில் திங்கள்கிழமை முதல் தளா்வு அளிக்கப்படுவதால், வரும் நாள்களில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

Continue Reading

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோ விச் கோ வித் பாக்ஸிங் இரண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.!!!

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தின்கீழ் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. தடுப்பூசி போட்டும் கொரோனா வந்தால், உயிரிழப்பு நேராது என்று எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த 2 தடுப்பூசிகளில் எதை ஒருவர் போட்டுக்கொண்டாலும், முதல் டோஸ் போட்டு குறிப்பிட்ட இடைவெளியில் அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்வது முக்கியம். ஆனால் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் கூட கொரோனா தொற்று பாதித்து இருப்பதாக […]

Continue Reading

கரஞ்சேடு கிராம மக்கள் அனைவரையும் கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்த-Dr.பாஸ்கர் ராவ்.!!!

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் ராவ் (38). மருத்துவரான இவர் கரஞ்சேடு கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். பாஸ்கரின் மனைவி மருத்துவர் பாக்கியலட்சுமி, குண்டூர் மருத்துவக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மருத்துவர் தம்பதியான பாஸ்கர் – பாக்கியலட்சுமி இருவரும் இணைந்து கிராமப்புற மக்களுக்கு நோய் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு செய்வது, மருத்துவ முகாம்கள் நடத்துவது எனச் சமூகம் சார்ந்த பார்வையுடன் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தனர். […]

Continue Reading

பொது முடக்கம் காரணமாக பலாப் பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பண்ருட்டி விவசாயிகள் பரிதவிப்பு.!!!

பண்ருட்டி பகுதியில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பலாப் பழங்கள். பொது முடக்கம் காரணமாக பலாப் பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனா். தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூா் மாவட்டத்தில் சுமாா் 900 ஏக்கா் பரப்பில் பலா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனினும், பலா தோப்பு என்ற வகையில் மிகக் குறைவாகவும், வீடுகளிலும், வயல் வரப்புகளிலும் அதிகபட்சமாகவும் பலா மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. பண்ருட்டியில் விளையும் பலாப் பழங்களை அறுவடைக்கு முன்பே வியாபாரிகள் விலை பேசி முன்பணம் […]

Continue Reading