கறுப்பு உள்ளிட்ட பிற பூஞ்சைத் தொற்றுகள் பற்றிய பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கவும், பயத்தைப் போக்கவும்.!!!

கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் குறைவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கியிருப்பது சற்று ஆறுதலளிக்கிறது. ஆனால் கோவிட் தொற்று தாக்கியவர்களுக்கு ஏற்படும் கறுப்பு பூஞ்சைத் தொற்று பலரை கலக்கத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்திலும் 400-க்கும் மேற்பட்டவர்களை இந்தத் தொற்று பாதித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கறுப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் உயிரிழக்கும் நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. தேவையான மருந்து உள்ளிட்ட விஷயங்களில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், கறுப்பு பூஞ்சைத் தொற்றைத் […]

Continue Reading

பிரதமர் நரேந்திர மோடி-“கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும்”.!!!

பிரதமர் நரேந்திர மோடி கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அலுவலகம் அறிவித்துள்ளது. இதுபற்றி வெளியான அறிவிப்பு: “கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் 18 வயதைக் கடந்த பிறகு, அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும். கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் உயர்கல்விக் கடனுக்கு உதவிகள் வழங்கப்படும். அதற்கான வட்டி, பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து செலுத்தப்படும். கரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த […]

Continue Reading

தமிழகத்தில் கொரோனா தாண்டவம் இன்று ஒரேநாளில் புதிதாக 30016 பேருக்கு நோய் தொற்று.!!!

தமிழகத்தில் இன்று புதிதாக 30,016 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,74,349 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், புதிதாக 30,016 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 3,692 போ்பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.  அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 2,705 பேருக்கும், ஈரோட்டில் 1,742 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,39,716ஆக உயர்ந்துள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா […]

Continue Reading

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!!!

தமிழகத்தில் 84.5 லட்சம் பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மருத்துவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா சிகிச்சை மையங்கள், தடுப்பூசி முகாம்கள், கரோனா பரிசோதனை மையங்களில் ஆய்வு […]

Continue Reading

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்கால பராமரிப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.!!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (29.5.2021) தலைமைச் செயலகத்தில், கொரோனாவால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்கால பராமரிப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Continue Reading

ஊரடங்கு நீட்டிப்பு தளர்வின்றி ஊரடங்கு ஜூன் 7ஆம் தேதி வரை.!!!

சென்னை, கொரோனாபரவலை தடுக்க பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த10-ந் தேதி முதல்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தளர்வு இல்லை எனினும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து கடந்த 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தற்போது காய்கறி, மளிகை கடைகள், இறைச்சி-மீன் கடைகள், பேக்கரி போன்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளின் […]

Continue Reading

சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் இறக்குமதி.!!!

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, கொரோனா பரவலின் 2-வது அலையால், தற்போது நிலவி வரும் ஆக்சிஜன் மற்றும் அதன் தொடர்புடைய சாதனங்களின் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) போதிய அளவு ஆக்சிஜன் சாதனங்களை கொள்முதல் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி சிப்காட் நிறுவனம் சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் துபாயில் இருந்து 1,915 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 2,380 ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகள், 3,250 ஆக்சிஜன் ஓட்ட அளவு கருவிகள், […]

Continue Reading

பிரியங்கா காந்தி வலியுறுத்தல் “மருத்துவ அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்”.!!!

‘மருத்துவ அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்’: பிரியங்கா காந்தி தொற்று நோய் காலத்தில் மருத்துவ அத்தியாவசிய பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “ஒரு தொற்றுநோய்களின் போது ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்

  கமல்ஹாசன் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் உருவான பொருளாதார மந்தநிலையில் சிறு குறு நடுத்தர தொழில்கள் ஏற்கனவே தள்ளாடி வந்தன. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கரோனா தொற்று பரவியது. இப்போதோ இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்திருக்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு ஒன்றே உடனடி வழி என்றாகிவிட்டது. இந்த ஊரடங்கு சிறு குறு நடுத்தர தொழில்கள் மீது விழுந்த சம்மட்டி அடியாகி விட்டது. தமிழகத்தின் தொழில்துறையைப் பாதுகாக்க நிலையான மின்சார கட்டண தொகையினை இந்த […]

Continue Reading

தமிழக முதல்வருக்கு அகில இந்திய ஊடக-பத்திரிக்கையாளர் சங்கம் வேண்டுகோள்.!!

தமிழக முதல்வராக மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பிறகு சில சலுகைகளை அறிவித்து வருவது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு சங்களின் கோரிக்கைகளுடன்,தேசிய அளவில் செயல்படும் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கமும் கோரியுள்ள கோரிக்கைகளை அரசு கனிவுடன் நிறைவேற்றும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. கொரோனா காலத்தில் பத்திரிகையாளர்களை முன்கள பணியாளராக அறிவித்து அவர்களுக்கு ஊக்க தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என்று அறிவித்தது மட்டும் அல்லாமல் உடனடியாக அதற்கு செயல் வடிவம் […]

Continue Reading