மலேசியா லிட்டில் இந்தியாவில் எம்ஜிஆர் சிலை தமிழக அமைச்சர் திறந்துவைத்தார்.!!

மலேசியாவில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் விஜிபி உலகத் தமிழ் சங்கம்  வழங்கிய எம்ஜிஆர்  சிலையை கோலாலம்பூர் லிட்டில் இந்தியாவில் புதியதாக அமைக்க பட்ட எம்ஜிஆர் மையத்தில் தமிழக அமைச்சர் திரு. கடம்பூர் ராஜீ திறந்து வைத்தார் அருகில் விஜிபி உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம், எம்ஜிஆர் மன்ற தலைவர் மணிவாசகம் மற்றும் விளாத்திகுளம் எம்எல்ஏ திரு.சின்னப்பன் உள்பட ஏராளமான  மலேசிய  அறிஞர்கள் ,எழுத்தாளர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Continue Reading

மிக மிக அவசரம் படத்தில் பெண் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்த ஸ்ரீபிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு.!!

ஸ்ரீபிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு.! சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள மிக மிக அவசரம் படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்காவை தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் அழைத்து பாராட்டினார். சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள மிக மிக அவசரம் என்ற படத்தில், பெண் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரீபிரியங்கா. சினிமாவுக்கு வந்து 5 வருடங்களுக்கு மேலாகி விட்டது என்றாலும், நினைத்த இடத்துக்கு இன்னும் வர முடியவில்லை என்று கூறியுள்ளார். இப்படம் […]

Continue Reading

தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி.!!

தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி.!! இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பக பாங்காக் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார். பாங்காக்: இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் நாளை நடக்கிறது. இதைபோல 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது. இவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று தாய்லாந்து […]

Continue Reading

112 வது தேவர்ஜெயந்தி திருநாளை முன்னிட்டு இன்று நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு கராத்தே தியாகராஜன் மாலை அணிவித்தார்.!!

112 -வது தேவர்ஜெயந்தி திருநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை நந்தனம் பசும்பொன் தேவர் திருமகனார் திருவருச்சிலைக்கு கராத்தே ஆர்.தியாகராஜன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உடன் தி.நகர் பகுதி காங்கிரஸ் தலைவர் நாச்சிக்குளம் சரவணன், சைதை பகுதி காங்கிரஸ் தலைவர் முத்தமிழ், மயிலை பகுதி காங்கிரஸ் தலைவர் கௌரிசங்கர் தென்சென்னை மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சாந்தி மற்றும் தென்சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தி.நகர் விக்னேஷ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரஜினிகாந்த் புதிய வீடு வழங்கினார்.!!

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடுமபத்தினருக்கு மொத்தம் 18 லட்சம் செலவில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை பயனாளர்களுக்கு இன்று ரஜினி வழங்கினார். கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்பால் நாகை மாவட்டத்தில் பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். ரஜினி மக்கள்.மன்றம் சார்பில் முழுவதுமாக வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோடியக்கரையில் நான்கு வீடுகளும் […]

Continue Reading

திருவல்லிக்கேணியில் மழையால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நிலவேம்பு கசாயம் நலத்திட்டங்களை தமிழ்நாடு கார் ஓட்டுனர் நல சங்கத்தினர்கள் வழங்கினர்.!!

  தமிழ்நாடு  கார் ஓட்டுனர் நல சங்கத்தின் மாநில தலைவர் ஜே.பி. செல்வம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு தமிழ்நாடு கார் ஓட்டுநர் நல சங்கம் சார்பாக திருவல்லிக்கேணி சிவராஜபுரத்தில் நிலவேம்பு கஷாயம், மற்றும் நலத்திட்ட உதவிகள் பெண்களுக்கு புடவைகள், ஆண்களுக்கு  வேட்டி லுங்கிகள் இன்று மாநில தலைவர் ஜே.பி. செல்வம் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு  கார் ஓட்டுனர் நல சங்கம் மூத்த நிர்வாகிகள் சத்தியேந்திரன், ஜெயக்குமார், ஏ. ராஜா, கே.கண்ணன், கார்த்தி, […]

Continue Reading

தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பிரதமர் மோடியை சந்தித்தார்.!!

டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை  தெலுங்கானா ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு தமிழிசை சௌந்தராஜன் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்தார். பின்னர் தமிழிசை சௌந்தரராஜனிடம் தெலுங்கானா மாநில நிலவரங்களை கேட்டறிந்தார்

Continue Reading

இந்தியாவிலேயே முதன்முறையாக பார்வையற்ற பெண் ஐஏஎஸ் தேர்வு எழுதி கலெக்டர் ஆகி உள்ளார் கேரளாவில்.!!

இந்தியாவிலேயே முதல் முறையாக, பார்வையற்ற பெண் ஒருவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வு பெற்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் துணை கலெக்டராக பதவி ஏற்று சாதித்து காட்டியுள்ளார்.!! மஹாராஷ்டிர மாநிலம், உல்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர், பிரன்ஜால் பாட்டீல், 31. இவருக்கு, 6 வயதாக இருக்கும் போதே, இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. ஆனாலும், சோர்ந்து விடாமல், எப்படியாவது உயர் கல்வி படித்து, சாதித்து காட்ட வேண்டும் என்ற மன உறுதியுடன் இருந்தார். முதுநிலை பட்டம் பார்வையற்றோருக்கான பள்ளியில் படிப்பை […]

Continue Reading

தமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது என்று சீன அதிபர் ஜின்பிங் கூறினார்.!!

தமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது என்று சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார்.   மாமல்லபுரம் அருகிலுள்ள கோவளத்தில் தாஜ் ஓட்டலில் நடந்த இந்தியா- சீனா அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபர் ஜின்பிங் பேசும் போது கூறியதாவது:- இந்தியா வந்ததில் நான் மிகுந்த மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் எங்களுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு கொடுத்தீர்கள். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் உண்மையான அன்பை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்தியா-சீனா இடையே நல்லுறவு […]

Continue Reading

தமிழகம் முழுவதிலும் உள்ள எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு கூட்டமைப்பினர் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம்.!!

தமிழகம் முழுவதிலும் உள்ள எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு கூட்டமைப்பினர் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம்.!! சென்னை 9 அக்டோபர்   தமிழக அரசு எம் ஆர் பி செவிலியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் முறையை அமல்படுத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான செவிலியர் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான எம்.ஆர்.பி செவிலியர்கள் கலந்து கொண்டனர். நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை தமிழக […]

Continue Reading