மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்

  கமல்ஹாசன் மத்திய அரசின் தவறான கொள்கைகளால் உருவான பொருளாதார மந்தநிலையில் சிறு குறு நடுத்தர தொழில்கள் ஏற்கனவே தள்ளாடி வந்தன. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கரோனா தொற்று பரவியது. இப்போதோ இரண்டாம் அலை பரவல் தீவிரமடைந்திருக்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த ஊரடங்கு ஒன்றே உடனடி வழி என்றாகிவிட்டது. இந்த ஊரடங்கு சிறு குறு நடுத்தர தொழில்கள் மீது விழுந்த சம்மட்டி அடியாகி விட்டது. தமிழகத்தின் தொழில்துறையைப் பாதுகாக்க நிலையான மின்சார கட்டண தொகையினை இந்த […]

Continue Reading

தமிழக முதல்வருக்கு அகில இந்திய ஊடக-பத்திரிக்கையாளர் சங்கம் வேண்டுகோள்.!!

தமிழக முதல்வராக மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பிறகு சில சலுகைகளை அறிவித்து வருவது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு சங்களின் கோரிக்கைகளுடன்,தேசிய அளவில் செயல்படும் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கமும் கோரியுள்ள கோரிக்கைகளை அரசு கனிவுடன் நிறைவேற்றும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. கொரோனா காலத்தில் பத்திரிகையாளர்களை முன்கள பணியாளராக அறிவித்து அவர்களுக்கு ஊக்க தொகையாக ரூ.5,000 வழங்கப்படும் என்று அறிவித்தது மட்டும் அல்லாமல் உடனடியாக அதற்கு செயல் வடிவம் […]

Continue Reading

உலகம் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,25,066 -ஆக உயர்ந்துள்ளது.!!!!

வாஷிங்டன்: உலகம் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,25,066 -ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்புகள், அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா தொற்றின்இரண்டாவது அலை கோரத் தாண்டவமாடி வரும் நிலையில், நாளுக்‍கு நாள் தொற்று காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் இதுவரை  35,25,066 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பலியானதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அதிகாரப்பூர்வ எண்ணிக்‍கையைவிட 2 […]

Continue Reading

இங்கிலாந்தில் கொரோனா வைரசின் 2-வது அலை உலுக்கி எடுத்தது.!!!

லண்டன், இங்கிலாந்தில் கொரோனா வைரசின் 2-வது அலை உலுக்கி எடுத்தது. இதையடுத்து, அந்நாட்டில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன. தடுப்பூசி போடும் பணியும் துரிதப்படுத்தப்பட்டு அதிவேகத்தில் போடப்படுகிறது. இதனால், அங்கு நோய்த்தொற்று குறைய ஆரம்பித்தது. இதையடுத்து, இங்கிலாந்தில் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜூன் 21 ஆம் தேதிக்கு பிறகு தளர்த்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து இருந்தார். இதனால், தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக ஏற்கனவே அறிவித்தபடி, அந்நாட்டில் […]

Continue Reading

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் 30 நாள்கள் பரோலில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.!!!

பேரறிவாளன் சென்னை:ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் பரோல் கோரி, அவரது தாயாா் அற்புதம்மாள் முதல்வரிடம் கோரியிருந்தார். இதையடுத்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயூள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் பேரறிவாளனுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் பரோல் வழங்க பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு அளித்திருந்த கோரிக்கையை பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உரிய […]

Continue Reading

சிதம்பரத்தில் தனியார் தொடக்கப் பள்ளியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடக்கிவைத்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். உடன், மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர்.!!!

சிதம்பரம்: தமிழகத்துக்கு போதுமான கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், தடுப்பூசிகளை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் மாநில வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டினார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர். கூட்டத்தில் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகரிக்கவும், கூடுதலாக செவிலியர்களை நியமிக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து […]

Continue Reading

சென்னையில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு பள்ளியில் பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் மீது மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.!!!

சென்னையில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு பள்ளியில் பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் மீது மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். அதில் ஆசிரியர் ஆனந்த் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர். சேத்துப்பட்டு பகுதியில் மகரிஷி வித்யா மந்திர் தனியார் பள்ளியில் ஆசிரியர் ஆனந்த்-க்கு எதிராக முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பின்னர் முன்னாள் மாணவர்கள் பலரும் சேர்ந்து, […]

Continue Reading

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!!!

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்! ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கிறது. வழக்கமாக 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய இந்த கூட்டம், கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக நடைபெறவில்லை. இந்நிலையில் 8 மாதங்களுக்கு பின்னர் இன்று காலை 11 மணிக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இது ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 43-வது கூட்டம் ஆகும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொளி […]

Continue Reading

கடலுார் மாவட்டத்தில் பாதிப்பு தினமும் ஆயிரத்தை நெருங்கி விட்ட நிலையில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்தைக் கடந்து விட்டது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.!!!

கடந்த மாத இறுதியில் 1000 பேர் மட்டுமே சிகிச்சையில்இருந்த நிலையில், தற்போது, வெளி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் உட்பட 8,000 பேர் வரை சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் உள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் கடலுார் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சிதம்பரம்,விருத்தாசலம், பண்ருட்டி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பசுகாதார நிலையங்கள் என 35 இடங்களில் கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதவிர, மாவட்டத்தில் 7க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

Continue Reading

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கிறது என்று சென்னை ஐகோர்ட்டு பாராட்டியுள்ளது.!!!

சென்னை ஐகோர்ட் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கிறது என்று சென்னை ஐகோர்ட்டு பாராட்டியுள்ளது. சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்து பல்வேறு இடைக்கால உத்தரவை பிறப்பித்து வருகின்றனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது […]

Continue Reading