தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி சந்தித்து தங்களுக்காக பல்வேறு கோரிக்கைகளை கொடுத்தனர். அந்த மனுவை வாங்கிப் பார்த்த முதல்வர் இச்சங்கத்தினர் மனுவில் கேட்டுக்கொண்ட அனைத்து கோரிக்கைகளையும் விரைந்து பரிசீலிப்பதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க தலைவர் ராஜு, (டைம்ஸ் ஆப் இந்தியா) பொதுச் செயலாளர் சீனிவாசன் (தமிழ் இந்து) துணை செயலாளர் ராஜேஷ்(நமது அம்மா) துணை தலைவர்கள் குமரேசன்(விகடன் குழுமம்) ஹரி (ராஜஸ்தான் பத்ரிகா) பொருளாளர் சிதம்பரநாதன் (தினமலர்) ஆகியோர் கோரிக்கை மனுவை கொடுத்து முதல்வரை சந்தித்தனர்.