தி.மு.க.நேர் காணல் தொடங்கியது.
தமிழகத்தில் காலியாக உள்ள
21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர் பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆகியோர், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.