அத்திவரதரை காண வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன: மாவட்ட ஆட்சியர் பேட்டி…
காஞ்சிபுரம்: அத்திவரதரை காண வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மருத்துவ முகாம்களும், மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தகவல் அளித்துள்ளார். அத்திவரதர் சிலை இன்று இடம் மாற்றம் செய்யப்படுவது குறித்து முடிவெடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.