மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அறிவுறுத்தலின் படி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவிலில் பூஜை செய்யப் பட்ட பூக்களை மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபட்டனர் மயிலை பகுதி நிர்வாகிகள்.!!

சென்னை

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அறிவுறுத்தலின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக மயிலை 123வது பகுதி சார்பாக கிழக்கு அபிராமபுரம் அருள்மிகு பச்சையம்மன் திருக்கோவிலிருந்து எடுக்கப்பட்ட அம்மன் பூஜைக்கு பயன் படுத்தபட்ட 1 டன் எடையுள்ள பூக்களை மறுசுழற்சிக்காக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் 9வது மண்டல மாநகராட்சி அதிகாரிகள் ஜெயக்குமார், ஜெகன் (GCC) அவர்கள் மேற்பார்வையில் இந்த பூக்கள் மறுசுழற்சி மாற்றம் செய்யப்பட்டது. மயிலை பகுதி மக்கள் நீதி மய்யம் சார்பாக நடத்தப்பட்ட ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தினை 123வது பகுதி நிர்வாகிகள் பைக் ரமேஷ், என்.பாலச்சந்தர் ஆகியோர் 2ம் வருடமாக நிர்வாகிகளுடன் இப் பணியை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *