பேங்க் ஆப் பரோடா வங்கி சென்னை தலைமை அலுவலகம் சார்பில் ஊரடங்கினால் வாழாதராம் பாதிக்கபட்ட கார் ஓட்டுனர்களுக்கு அரிசி உணவு பொருட்களை இவ்வங்கியின் டி.ஜி.எம் ஸ்ரீ சலபதி நாயுடு வழங்கினார்.!!
கொரோனோ அச்சம் காரணமாக தொடர் ஊரடங்கு இருப்பதால் வேலைவாய்ப்பு இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு கார் ஓட்டுநர் நல சங்க டிரைவர்களுக்கு பாங்க் ஆப் பரோடா டி .ஜி.எம் ஸ்ரீ சலபதி நாயுடு அவர்கள் தலைமையில் தமிழ்நாடு கார் ஓட்டுனர்கள் நல சங்கத்தின் தலைவர் திரு.ஜெ.பி.செல்வம், நிர்வாகிகள் மற்றும் மகாபலிபுரம் ரமேஷ் அவர்கள் முன்னிலையில் 100 ஓட்டுநர்களுக்கு தலா 5 கிலோ அரிசி உணவுப்பொருட்களை வழங்கினார்கள் இந்த நலத்திட்ட நிகழ்வில் ஏராளமான கார் ஓட்டுனர்கள் கலந்து கொண்டுநலத்திட்ட உதவிகளை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர் ஓட்டுநர் சங்கத்தை சோர்ந்தவர்களை வரவழைத்து உணவு பொருட்களை வழங்கி கௌரவப்படுத்திய பேங்க் ஆப் பரோடா அதிகாரிகளுக்கு தமிழ்நாடு கார் ஓட்டுநர் நலசங்க தலைவர் ஜெ.பி.செல்வம் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.