கேரள மாநிலம் மலப்புரத்தில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பள்ளி ஆசிரியர் அவர். மாணவ -மாணவியரால் பெரிதும் விரும்பப்பட்ட கணித ஆசிரியர். அப்படிப்பட்டவர் அங்குள்ள ரயில் நிலையம் முன்பு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார் .
அவரிடம் படித்த ஒரு மாணவி அவரைப் பார்த்து விட்டார்.
அவர் கண்களையே அவரால் நம்பமுடியவில்லை. அருகில் சென்று பேச்சுக் கொடுத்தார். நம் ஆசிரியர்தான்! “என்னாச்சு உங்களுக்கு என்று கேட்டார். !”
“பணி ஓய்வுக்குப் பிறகு என் பிள்ளைகள் என்னை கைவிட்டு சென்றுவிட்டனர், அவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை”! என்றார் கண்ணீர் மல்க.
தூக்கி வாரி போட்டது அந்த மாணவிக்கு. உடனடியாக அவரை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார், நல்ல உடையும் உணவும் கொடுத்தார். தன் வகுப்பு நண்பர்கள் அனைவருடனும் தொடர்பு கொண்டார். அனைவரும் ஒன்று சேர்ந்தனர்.
அவரை ஒரு நல்ல இடத்தில் சேர்த்தனர். அவருடைய எஞ்சிய காலம் நிறைவானதாக அமைய அனைத்துஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.
ஒரு பக்கம் பெற்றத் தாயைத் தவிக்க விட்டுக் காணாமல் பிள்ளைகள்!.
இன்னொரு பக்கம் சில காலமே கற்பித்த ஆசிரியைக்காக துடிதுடித்துப் போன
மாணவர்கள்….செய்தி தமிழாக்கம் ம.வி.ராஜதுரை