தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சம்பந்தப்பட்ட புகார்களை பயனாளிகள் உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை மாண்புமிகு முதல்வர் அவர்கள் TANGEDCO தலைமையகத்தில் இன்று தொடங்கி வைத்தார்கள். இந்த நிகழ்வில் தொகுதி MLA எனும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
உடன் மத்திய சென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் இருந்தார்கள். மேலும், இந்த புதிய முயற்சியை எடுத்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களுக்கும், மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக அதிகாரிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்தார்கள்.