லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் ரு 2 கோடி முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்கள்.!!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், லைகா புரோடக்சன்ஸ் சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து,கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Continue Reading

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆய்வு.!!

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை அருள்மிகு மீனாட்சி சந்தரேஸ்வரர் திருக்கோயில் வீரவசந்தராயர் மண்டபம் திருப்பணி மற்றும் கோயில் யானைக்குத் தேவையான மேல் சிகிச்சைக்கு நடவடிக்கை மற்றும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மேம்பாட்டுப் பணிகள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் நேரில் ஆய்வு.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.18 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வீரவசந்தராயர் மண்டபம் திருப்பணிகள் மற்றும் […]

Continue Reading

உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணியில் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு.!!

  சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பகுதி, 116 வது வட்டம், பெரிய தெருவில் செயல்பட்டுவரும் T.U.C.S சிறு அங்காடியில் தமிழக அரசால் வழங்கப்படும் கொரோனா கால நிவாரண நிதி, மளிகை பொருட்கள் பயனாளிகளுக்கு முறையாக சென்று சேருகிறதா என சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று ஆய்வு செய்தார். நியாய விலை கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் வாங்கிய பொருட்களை திறந்து பார்த்துபொருட்கள் சரியாக உள்ளனவா என சோதனை செய்து பார்த்தார். இவர் […]

Continue Reading

டெல்லியில் சோனியா-ராகுல் காந்தியை சந்தித்தார் முதல்வர் முக ஸ்டாலின்.!!

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றபின் தனிவிமானத்தில் முதன்முதலாக டில்லி சென்றார். நேற்று  மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஸ்டாலின், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். பின்னர் செய்தியளார்களை சந்தித்தபோது, பிரதமருடனான சந்திப்பு மன நிறைவான சந்திப்பாக அமைந்துள்ளதாகவும் மேலும் தமிழகத்தின் வளர்ச்சி திட்டத்துக்கு உறுதுணையாக இருப்பேன் என பிரதமர் மோடி உறுதியளித்ததாகவும் தெரிவித்தார். இந்நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் காங்., எம்.பி., ராகுலை அவர்களது இல்லத்திற்கு […]

Continue Reading

உதயநிதி ஸ்டாலின் திருநங்கைகளுக்கு கொரோனோ கால நிவாரண நிதி ரு.2000 மளிகை பொருட்கள் மற்றும் சமூக நலத்துறை அடையாள அட்டையை வழங்கினார்.!!

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த 95 திருநங்கைகளுக்கு ஊரடங்கு கால நிவாரணமாக தலா ரூ.2,000 மற்றும் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த நிதியிலிருந்து இன்று வழங்கினார். மேலும், அவர்களுக்கு சமூக நலத்துறை சார்பிலான அடையாள அட்டைகளையும் வழங்கினார்அவற்றைப் பெற்றுக்கொண்ட திருநங்கைகள் ஆறுக்கு நெஞ்சார வாழ்த்து தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Continue Reading

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்தார்.!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி சென்றார் அங்கு பிரதமரை சந்தித்த உடன் அவர் கூறியதாவது பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாகவும் மன நிறைவையும் தந்தது. தமிழக முதல்வரானதற்கு முதலில் வாழ்த்து சொன்னார் பிரதமர். எந்நேரமும் என்னைத் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்தார். நீட் ரத்து, நிதித் தேவை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.அதன் பின்னர் பிரதமர் மோடியைச் சந்தித்தபின் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின். அப்போது அவர் […]

Continue Reading

கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வழிபாட்டுதலங்களிலும் மின்கட்டணத்தை ரத்து செய்ய தமிழ்நாடு முஸ்லிம் லீக் அரசுக்கு வேண்டுகோள்.!!

கொரோனா பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வழிபாட்டுதலங்களிலும் மின்கட்டணத்தை ரத்து செய்வதோடு, இலவச மின்சாரம் வழங்குக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்.!! தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காட்டுத்தீ போல மிகவும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு ஊரடங்கு வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Continue Reading

தனியார் பள்ளி கல்வி கட்டணம் – நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் எம்.எஸ்.எம்.முஸ்தபா வேண்டுகோள்.!!

  தனியார் பள்ளி கல்வி கட்டணம் – நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் எம்.எஸ்.எம்.முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாததால் 1 முதல் 11 […]

Continue Reading

கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 5 லட்ச ரூபாய் வைப்பீடு பத்திரம் வழங்கினார்.!!

  கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (16.6.2021) தலைமைச் செயலகத்தில், அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்து, அக்குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகையை அக்குழந்தைக்கு வட்டியோடு வழங்கும் வகையில் 5 குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு […]

Continue Reading

சென்னை டி.யு.சிஎஸ்.ரேஷன் கடையில் முதல்வர் இன்று திடீர் ஆய்வு.!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.யு.சிஎஸ் ரேஷன் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் தமிழகம் முழுவதும் நேற்று முதல் நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரமும், 14 மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.யு.சி.எஸ் ரேஷன் கடையில் இன்று திடீரென நேரில் […]

Continue Reading