பிரேசிலின் நெய்மருக்கு ஃபிபா தலைவர் ஆதரவு

விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் கால்பந்து நட்சத்திர வீரரான நெய்மர் எதிரணி வீரர்களால் அதிக முறை பவுல் செய்யப்பட்டு கீழே விழுந்த போது அவர், நடிப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவருக்கு ஆதரவாக ஃபிபா தலைவர் இன்பான்டினோ கருத்து தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியடைந்து தொட ரில் இருந்து வெளியேறியது. முன்னதாக நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், எதிரணி வீரர் காலை தட்டிவிட்டதாகக்கூறி சில அடி தூரத்துக்கு டைவ் செய்தபடி உருண்டு சென்று விழுந்தார்.

இதுதொடர்பாக ஆட்டம் முடிவடைந்ததும் மெக்சிகோ அணி யின் பயிற்சியாளர் கடும் விமர்சனம் செய்தார். நெய்மர் வேண்டுமென்றே நடித்து நேரத்தை கடத்தியதால் தங்கள் அணியின் ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.இந்நிலையில் நெய்மர் களத்தில் விழும் காட்சிகளை கேலி செய்து ரசிகர்கள் டுவிட்டரில் வீடியோக்களை பதிவிட்டனர்.

இந்நிலையில் இது குறித்து ஃபிபா தலைவர் இன்பான்டினோ கூறுகையில், நெய்மர் சிறந்த வீரர், அற்புதமான திறன் கொண்டவர். அவர் குறித்து எதிர்மாறான வார்த்தையை நான் கூற முடியாது. நெய்மர் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.

அவர் தனது உண்மையான கால்பந்து திறன்களை எதிர்காலத்தில் எதிர்காலத்தில் வெளிப்படுத்துவார்” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *