ஏசி சண்முகம் தலைமையில் நடைபெற்றஅனைத்துலக முதலியார் – வேளாளர் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆலோசனை கூட்டம்!!

  ஜாதிவாரி கணக்கெடுப்பு முதலியார் வேளாளர்கள் செங்குந்தர் நிலைப்பாடு குறித்த கருத்தரங்கம் ஏ.சி சண்முகம் தலைமையில் நடைபெற்றது!! சென்னை, ஜூன் 22 ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அனைத்து உலக முதலியார் வேளாளர் செங்குந்தர் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்த கருத்தரங்கம் ஏ.சி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அனைத்துலக முதலியார், வேளாளர், செங்குந்தர்கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தான கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் ஏ.சி சண்முகம், நீதி அரசர் இயக்குனர்கள் […]

Continue Reading

மலேசிய தமிழ் இயக்குநர் என்.பி. ராஜேந்திரன் தயாரிப்பில் புதிய இணைய தொடர்.!!

சென்னை ஜூன் 12 மலேசிய திரையுலகில்முன்னணி இளையஇயக்குநர்களில் ஒருவரானஎன்.பி.ராஜேந்திரனின் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத இணைய தொடர் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது இந்த இனிய தொடர் தயாரிப்பு 80 சதவீதம் முழுமையடைந்து விட்டது என இயக்குநர் என்.பி.ராஜேந்திரன் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது ஆஸ்ட்ரோ வானவில்சிறந்த குறும்பட விருதை பெற்ற எனது தயாரிப்பின் துர்கா1.0 மற்றும் ஜொகூர் பாருஎல்எப்எஸ் சினிமா திரையரங்கில்திரையிடப்பட்ட துர்கா 2.0குறும்படத்தை தொடர்ந்து இந்தஇணைய தொடரை நான் ஆரம்பித்துள்ளேன்’ என்றார்  இணைய உலகத்தின் தீமைகள் குறித்தும் […]

Continue Reading

உலக பட்டினி தினத்தை ஒட்டி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் நல திட்டங்களை த.வெ.க பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழங்கினார்.!!

சென்னை மே 28 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு.சென்னை மத்திய (தெற்கு) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தளபதி விலையில்லா விருந்தகத்தினை தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் துவக்கி வைத்து மதிய உணவு வழங்கினார்.! அதனைத்தொடர்ந்து சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண்களுக்கு புடவைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மத்திய (தெற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் R.திலீப்குமார் BA,.LLB அவர்கள் முன்னிலை […]

Continue Reading

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் திருவிக நகரில் ஏழைகளுக்கு அன்னதானம்.!!

  சென்னை மே 28 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் ஆணைக்கிணங்க இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வடசென்னை வடக்கு மாவட்டம் திரு வி க நகர் தனித் தொகுதி மாவட்டத்தில் திரு வி கா நகர் பகுதியில் 21 இடங்களில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் வடசென்னை வடக்கு மாவட்டம் திரு வி கா நகர் தனித்தொகுதி மாவட்ட செயலாளர் M.R. பல்லவி அன்னதானம் நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கினார். இந்நிகழ்வில் பகுதி […]

Continue Reading

மே 17 இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!!

தமிழீழத்தில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையின் 16ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மே 18, 2025 ஞாயிறு மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மே பதினேழு இயக்கம் சார்பாக நினைவேந்தல் நடைபெற்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்விடத்தில் வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூணில் வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட […]

Continue Reading

த.வெ.க சார்பில் சேப்பாக்கத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.!!

தமிழக வெற்றிக் கழகத்தின் கழக தலைவர் விஜய் உத்தரவின்படி பொதுச் செயலாளர் N.ஆனந்த்  வழிகாட்டுதலின்படி *முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி* சென்னை மத்திய தெற்கு மாவட்டம் சார்பாக சிந்தாதிரிப்பேட்டை கிழக்கு ஆறுவழி சாலை ஐயா முதலி தெருவில் இலங்கையில் நடந்த ஈழத் தமிழர்களை நினைவு கூரும் விதமாக நினைவேந்தல் தினம்* அனுசரிக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏந்தி ,மலர் தூவி உறுதிமொழி ஏற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மத்திய சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆர்.திலிப் குமார் தலைமையில் அனைத்து […]

Continue Reading

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ராயப்பேட்டையில் மருத்துவ முகாம்.!!

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் உத்தரவின்படி பொதுச் செயலாளர் *N. ஆனந்த்* அறிவுறுத்தலின்படி ஏழைகளுக்கான மருத்துவ முகாமை சென்னை மத்திய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் R.திலீப்குமார் பங்கேற்று தொடங்கி வைத்தார். திருவல்லிக்கேணி பகுதி 119வது வட்டம் சார்பாக இன்று மீர்சாகிப்பேட்டை மார்க்கெட் அருகில் உள்ள VM தெருவில் நடந்த இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்தனர் இந்த மருத்துவ முகாமில் தமிழக வெற்றிக் கழக மருத்துவமனை குழுவில் இடம் பெற்ற டாக்டர் […]

Continue Reading

அண்ணாநகர் எஸ் பி ஒ ஏ பள்ளி மற்றும் இளநிலை கல்லூரி மாணவிகள் யோகிதா 497/500 நித்திலா 494/500 மதிப்பெண் எடுத்துச் சாதனை.!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் தேர்வுகள் சில வாரங்கள் முன்பு நடந்து முடிந்தது. தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இந் நிலையில் 12ம் வகுப்பு தேர்வெழுதியவர்களுக்கு முடிவுகள் இன்று வெளிவந்தது இதில் சென்னையை சேர்ந்த அண்ணா நகர் எஸ்.பி.ஒ.ஏ பள்ளி மற்றும் இளநிலைக் கல்லூரி மாணவிகள் யோகிதா 497/500 நித்திலா 500-494 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Continue Reading

அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா” புதுமையான திரைப்படம்.!

அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா” ‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குனர் K.P.தனசேகர். ஒரு நாலு பசங்க பிரச்சனைகளோடு பூங்கா வருகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பதுதான் கதை. கதாநாயகனாக கௌசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் […]

Continue Reading

மலேசியாவில் இளையராஜாவை வரவேற்ற பிரதமர் அன்வார்.!!

சென்னை ஏப்ரல் 4: மலேசியா பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள், இந்திய இசை துறையின் துருவ நட்சத்திரம் இசைஞானி இளையராஜாவை இன்று தனது அலுவலகத்தில் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தார்.இந்த சந்திப்பின் போது, மலேசியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான கலை, கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து விரிவாக உரையாடப்பட்டது. இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் கலாச்சார நினைவுகள் மற்றும் இந்திய திரைப்படங்கள், இசை ஆகியவை மலேசிய இந்தியரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் […]

Continue Reading