ராஜன் ஐ கேர் நடத்திய கண்புரை 2025 ஆண்டு மாநாடு நடந்தது.!!

சென்னை தி.நகர் ராஜன் கண் மருத்துவமனை மற்றும் ஐ.எஸ்.எம்.எஸ்.ஐ.சி.எஸ்., தென் மண்டல சென்னை அத்தியாயம் இணைந்து, ‘கண்புரை மாநாடு – 2025’ துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழாவை நேற்று நடத்தினர் இதில், கண் மருத்துவத் துறையில் நீண்ட நாட்களாக பணிபுரியும் பேராசிரியர்களுக்கு சிறந்த சேவைக்கான விருதை தலைமை விருந்தினர் பெங்களூர் கார்த்திக் நேத்ராலயா மருத்துவ இயக்குநர் ரவிந்திராவுக்கு ராஜன் கண் மருத்துவமனை தலைவர் மற்றும் மாநாட்டின் ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர் மோகன் ராஜன் வழங்கிய […]

Continue Reading

மலேசியத் தமிழ் திரைப்படமான “குற்றவாளி” படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு முடிந்தது:விரைவில் மலேசிய நாடெங்கும் திரையரங்கங்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.!!

மலேசியாவில் 1970களில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது இந்த “குற்றவாளி” படம்.அந்த காலகட்டத்தில் காதல் செய்த ஜோடிகளுக்கு சமுதாயத்தால் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றியும் காதலர்களின் பெற்றோர்கள் இவர்களை ஏற்றுக் கொண்டார்களா இல்லையா இக்காதல் பிரச்சினையில் யார் குற்றவாளி என்பதைப் பற்றி விறுவிறுப்பாக போகும் கதை இது என பட குழுவினர் தெரிவித்தனர் .இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள பேராக் என்ற ஊரில் 1970 ம் ஆண்டு கிராமம் எப்படி இருக்குமோ அதே மாதிரி பழமையான செட்டிங் […]

Continue Reading

“கருப்பையா பெருமாள்” இனி இத்திரைப்படம் மலேசிய தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்.!!

  மலேசியத் தமிழ் திரைப்பட கலைஞர்கள் இயக்கிய *கருப்பையா பெருமாள்”புதுமையான கதை அம்சத்தில் மலேசியாவில் உள்ள பினாங்,ஜகுர் பாரு,மலாக்கா உள்பட பல்வேறு மலேசிய நகரங்களில் புதுமையான கதை அம்சத்தில் உருவாகியுள்ள கருப்பையா பெருமாள் படம் புதுமை இயக்குனர் பென்ஜி இயக்கியுள்ளார்இசையமைப்பு பணியை – எம் ஸ்ரீ செய்துள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் – வி.ஷீலா பிரவினா மற்றும் இணை தயாரிப்பாளர் – ‘மக்கள் கலையன்’ கவிமாறன் நிர்வாக தயாரிப்பாளர் – டத்தோ ஏ.கே டிஓபி – எஸ்கே நாகன் […]

Continue Reading

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவல்லிக்கேணி முஸ்லிம் உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள்சந்திப்பு நிகழ்வு .!!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வருடாந்திர பொது சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இறைவணக்கத்திற்கு பின், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தலைவர் ஜுனைத்பாஷா வரவேற்புரையாற்றினார். செயலாளர் முகம்மதுஅப்துல்நசீர் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். பொருளாளர் சாஜித் அலி சங்க வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். நன்றி உரைக்குப்பின் தேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. துணைத்தலைவர் ஏஜாஸ்பேக் துணைச்செயலாளர் ரிஸ்வான்நசிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

சென்னையில் ‘கரன்சி கனவுகள்’ நூல் வெளியீடு !

சென்னையில் ‘கரன்சி கனவுகள்’ நூல் வெளியீடு ! தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் ந. அருள் வெளியிட, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பெற்றுக் கொண்டார் ! சென்னையில், தன்முனைப்பு எழுத்தாளர் திரு. இராம்குமார் சிங்காரம் எழுதி, யா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் படைத்துள்ள ‘கரன்சி கனவுகள்’ நூலின் முதல் பிரதியை, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் முனைவர் ந. அருள் வெளியிட, திரைப்படப்  பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில்  கல்லூரி […]

Continue Reading

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி அஜ்மீர் தர்காவில் ஜெ.எம்.பஷீர் ஏழைகளுக்கு பிரியாணி வழங்கினார்.!!

ராஜஸ்தான் அஜ்மீர் தர்காவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி! ஜெ.எம் பஷீர் ஏழைகளுக்கு பிரியாணி வழங்கினார்!! சென்னை டிசம்பர் 17 தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 48 தர்காக்களில் ஏழை எளியவர்களுக்கு அன்னதான வழங்கப்படும் என்று அமைச்சர் நாசர் ஒப்புதலுடன் அறிவித்த ஜெ.எம்.பஷீர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவில் ஏழைகளுக்கு பிரியாணி வழங்கினார் தர்காவின் நிர்வாகிகளான அல்ஹாஜ் ஷாநவா சிருஷ்டி , பரான்சிருஷ்டி முன்னிலையில் தர்காவில் […]

Continue Reading

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு முன்னேற்பாட்டுப் பணிகள்  நீர்நிலைகள் மற்றும் குளங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து செய்தியாளர்கள் குழுவினர்களுக்கு சென்னை முழுவதும் சுற்றி காண்பித்த மாநகராட்சி அதிகாரிகள்.!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு முன்னேற்பாட்டுப் பணிகள்  நீர்நிலைகள் மற்றும் குளங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து துணை ஆணையாளர் (பணிகள்) .வி.சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் செய்தியாளர்களுடனான சுற்றுப்பயணம் இன்று மேற்கொள்ளப்பட்டது..!!   சென்னை டிசம்பர் 4   தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  […]

Continue Reading

இசைஞானி இளையராஜா இசையில் ‘திருக்குறள்’ திரைப்படம்.!!

வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் ‘திருக்குறள்’ திரைப்படம் ” திருக்குறள் ” படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கும் இசைஞானி இளையராஜா. பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. படைப்பினூடாக படைப்பாளியைக் […]

Continue Reading

வெள்ளம் பாதித்த விழுப்புரம் -மரக்காணம் பகுதிகளில் சேதங்களை அண்ணாமலை பார்வையிட்டார்.!!

  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம் அனுமந்தை கிராமத்தில், ஃபெஞ்சல் புயலால் பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார் இந்தப் பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மூழ்கியிருக்கும் நெற்கதிர்களை, வெள்ளத்திற்குள் இறங்கி எடுத்துக் காட்டிய  பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்ற உறுதி அண்ணாமலை உறுதியளித்தார் மேலும், இந்தப் பகுதியில், கடந்த ஒரு வாரமாக […]

Continue Reading

சென்னை மாநகர கமிஷனர் அருண் காவலர்கள் குறைகளை கேட்டறிந்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில்,அமைச்சுப்பணியாளர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்றார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் A.அருண், இ.கா.ப, இன்று காலை வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற “காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில்” சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் கேட்டறிந்து, அமைச்சுப்பணியாளர்களிடம் குறைகளை அவர்களிடமிருந்து 39 குறைதீர் மனுக்களை பெற்றார். இம்முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பணிமாறுதல், குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட மனுக்களை […]

Continue Reading