இந்தியாவிலேயே முதன்முறையாக பார்வையற்ற பெண் ஐஏஎஸ் தேர்வு எழுதி கலெக்டர் ஆகி உள்ளார் கேரளாவில்.!!

இந்தியாவிலேயே முதல் முறையாக, பார்வையற்ற பெண் ஒருவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வு பெற்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் துணை கலெக்டராக பதவி ஏற்று சாதித்து காட்டியுள்ளார்.!! மஹாராஷ்டிர மாநிலம், உல்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர், பிரன்ஜால் பாட்டீல், 31. இவருக்கு, 6 வயதாக இருக்கும் போதே, இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. ஆனாலும், சோர்ந்து விடாமல், எப்படியாவது உயர் கல்வி படித்து, சாதித்து காட்ட வேண்டும் என்ற மன உறுதியுடன் இருந்தார். முதுநிலை பட்டம் பார்வையற்றோருக்கான பள்ளியில் படிப்பை […]

Continue Reading

தமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது என்று சீன அதிபர் ஜின்பிங் கூறினார்.!!

தமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது என்று சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார்.   மாமல்லபுரம் அருகிலுள்ள கோவளத்தில் தாஜ் ஓட்டலில் நடந்த இந்தியா- சீனா அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபர் ஜின்பிங் பேசும் போது கூறியதாவது:- இந்தியா வந்ததில் நான் மிகுந்த மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் எங்களுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பு கொடுத்தீர்கள். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் உண்மையான அன்பை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்தியா-சீனா இடையே நல்லுறவு […]

Continue Reading

தமிழகம் முழுவதிலும் உள்ள எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு கூட்டமைப்பினர் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம்.!!

தமிழகம் முழுவதிலும் உள்ள எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு கூட்டமைப்பினர் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம்.!! சென்னை 9 அக்டோபர்   தமிழக அரசு எம் ஆர் பி செவிலியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் முறையை அமல்படுத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான செவிலியர் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான எம்.ஆர்.பி செவிலியர்கள் கலந்து கொண்டனர். நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை தமிழக […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அறிவுறுத்தலின் படி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவிலில் பூஜை செய்யப் பட்ட பூக்களை மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபட்டனர் மயிலை பகுதி நிர்வாகிகள்.!!

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அறிவுறுத்தலின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக மயிலை 123வது பகுதி சார்பாக கிழக்கு அபிராமபுரம் அருள்மிகு பச்சையம்மன் திருக்கோவிலிருந்து எடுக்கப்பட்ட அம்மன் பூஜைக்கு பயன் படுத்தபட்ட 1 டன் எடையுள்ள பூக்களை மறுசுழற்சிக்காக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் 9வது மண்டல மாநகராட்சி அதிகாரிகள் ஜெயக்குமார், ஜெகன் (GCC) அவர்கள் மேற்பார்வையில் இந்த பூக்கள் மறுசுழற்சி மாற்றம் செய்யப்பட்டது. மயிலை பகுதி மக்கள் நீதி மய்யம் சார்பாக […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேச்சாளருக்கான கிராம சபை பயிற்சி பட்டறை சென்னையில் நடந்தது.!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேச்சாளருக்கான கிராம சபை பயிற்சி பட்டறை செப்.22, 2019. அன்று சென்னை மாவட்டம் நந்தனத்தில் உள்ள ஹுயுமா மருத்துவமனை கலை அரங்கத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு பயிற்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேச்சாளர்கள் பங்கேற்றனர் இந்த கூட்டத்தில் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று, கிராம சபை கூட்டத்தின் நோக்கம், கிராம சபை கூட்டத்தில் செய்யவேண்டியது செய்யக்கூடாதவை, காந்தியம், கிராமிய பொருளாதாரம் மற்றும் மகளிர் மேம்பாடு பற்றி உரையாற்றினர். […]

Continue Reading

மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்கள் சேவை முகாமை பொதுச் செயலாளர் ஏ.ஜி. மௌரியா தொடங்கி வைத்தார்.!!

மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்கள் சேவை முகாமை பொதுச் செயலாளர் ஏ.ஜி. மௌரியா தொடங்கி வைத்தார்.!! சென்னை செப்டம்பர் 15 மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் கமலஹாசன் அறிவிப்பின்படி தென் சென்னை கிழக்கு மாவட்டம் மயிலை பகுதி 173 வது வட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்கள் சேவை முகாமை பொதுச் செயலாளர் ஏ.ஜி. மௌரியா IPS(Rtd) அவர்களாலும் மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொறுப்பாளர் கிருபாகரன் தலைமையிலும் மந்தவெளி ஆர் கே […]

Continue Reading

சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கலந்துகொண்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில் 4 அடுக்குமாடியை இடித்து8 மாடி கட்டிடம் கட்ட குடியிருப்போர் கடும்எதிர்ப்பு.!!

குடிசைப்பகுதி மக்களுக்கு  8 மாடி குடியிருப்பு திட்டம் நன்மை தராது! மயிலாப்பூர் கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கடும் எதிர்ப்பு!! சென்னை செப்-15 குடிசைப்பகுதி மக்களுக்கு 8 மாடி குடியிருப்பு திட்டம் நன்மை தராது என்று மயிலாப்பூரில் நடைபெற்ற  கருத்துக்கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை, மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால்  அங்கு வசித்து வந்த குடிசை மக்களுக்கு  அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன . இந்த வீடுகள்  பழுதாகி விட்டதால் இவற்றை […]

Continue Reading

ஆட்டோவில் தவறவிட்ட பையை 1 மணி நேரத்தில் ஒப்படைந்த ஆட்டோ டிரைவர் பாராட்டு குவிகிறது…!

ஆட்டோவில் தவறவிட்ட பையை 1 மணி நேரத்தில் ஒப்படைந்த ஆட்டோ டிரைவர் பாராட்டு குவிகிறது…! சென்னை.செப்-14 பங்களாதேஷ், சிட்டா காங் பகுதியை சேர்ந்தவர் முகமது ராஷேத் (வயது 30) இவர் இம்மாதம் 1-ம் தேதி அவரது சொந்த ஊரில் இருந்து உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவர் தங்கியிருக்கும் ரூமிலிருந்து ஆட்டோவில் மருந்துவமனைக்கு வந்தார்.அப்போது ஆட்டோவில் அவரது பையை தவறவிட்டார். அதில் அவர் வைத்திருந்த பாஸ்போட், […]

Continue Reading

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.!!

மலேசியாவில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.!! சென்னை செப்டம்பர் 13 மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் 22 நாடுகள் கலந்து கொள்ளும் பிரமாண்ட கராத்தே போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் அடங்கிய குழு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். வரும் செப்டம்பர் 16ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை […]

Continue Reading

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை இன்று சென்னை வருகை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொன்மாணிக்கவேல் பெற்றுக்கொண்டார்.!!

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட  பழங்கால நடராஜர் சிலை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டு இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தடைந்தது. எச்டி பொன்மானிக்கவேல் பெற்றுக்கொண்டார். வெளிநாடுகளில் இன்னும் 20 சிலைகள் உள்ளன என பொன்மானிக்கவேல் தெரிவித்தார்.!! நடராஜர் சிலையை கொண்டு வந்த பொன்.மாணிக்கவேல் சென்னையில் அளித்த பேட்டியில், “37 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிலையை நாங்கள் கண்டுபிடித்து கொண்டு வந்துள்ளோம். நாம் கும்பிடும் சாமி சிலைகள் வெளிநாட்டில் காட்சிப் பொருளாக வைக்கப்படுகின்றன. சிலைகள் கடத்தல் வழக்கில் […]

Continue Reading